Tuesday, July 27, 2010

என் சந்தோசக் காற்றே




என் வ்குப்பில் ஒரு நாள் மாசுபடுதல் பற்றி நடத்தினேன். அவர்களிடம் மாசுபடுதளை தடுப்பதற்காக கடைக்குச் சென்றால் துணிப்பைக்ளை எடுத்துச் செல்லவேண்டும் என்றும் ,ப்ளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்றும் ப்ளாஸ்டிக்கின் தீமைகள் பற்றியும் கூறினேன்.வகுப்பு முடியும் போதுகூறினேன்,நாளை அனைவரும் நோட் ம்ற்றும் புத்தகத்திற்கு அட்டை போடவேண்டும் என்று,அடுத்த நாள் ஒரு ஆச்சரியம் நடந்தது அனைவரும் நாளிதழ்களை அட்டையாக அணிந்திருந்தனர்.அதற்கு நான் கேட்டேன் ஏண்டா ஒரு ப்ரவுன் சீட் கூட போட முடியாதா என்று .அவர்கள் கூறினர் நீங்கதான மிஸ் சொன்னீங்க ப்ளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று . அன்று முதன்முதலாக என் சந்தோசக்காற்றை சுவாசித்தேன்.

Friday, July 23, 2010

என் பெயர் கார்த்திகா



என் பெயர் கார்த்திகா,
இது என் முதல் பதிவு.இதில் அதிகமாக நன்றி கூற விருமபுவது என் அண்ணனுக்குத் தான்.ஏனெனில் இந்த உலகத்தை அறிமுகம் செய்ததே என் அண்ணனே.இதில் என் கணினிப் பயணத்தை கூற விழைகிறேன்.எனக்கும் எந்தக் கணிக்கும் எந்த அளவு தொடர்பு என்பதை தாங்கள் தான் கூற வெண்டும். நான் தொலை தூரக்கல்வியில் கணிதம் பயில்கிறேன். அதில் ஒரு பாடம்/ அதற்காக என் வீட்டில் கணினி வாங்கிக்கொடுத்தார்கள் நான் வசதியான பெண் என்று நினைத்துவிடாதீர்கள். ஆனாலும் என் அம்மாவின் தன்னம்பிக்கையும், என் அப்பாவின் பிள்ளைகளுக்காக எதையும் செய்யும் எண்ணமும் பணவசதியையும் விட அதிக அளவு வசதி வாய்ப்பை எனக்கு நல்கியது. வசதியானவளா? இல்லையா? என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. இதற்கு பதில் ஆ..ஆ.. தெரியலையே.