Tuesday, September 7, 2010

கல்கி என்ற சரித்திரமே!!!

சமுதாயச் சிற்பி பிற‌ந்த தினம
சரித்திர நாயகன் மண்ணில் உதித்ததினம்
வாழ்பவனையே நினைக்க நேரமில்லை
வாழ்ந்த்தவனை நினைப்பது சாதாரணமா
சிவகாமியின் சபதத்தை வென்றவரே
பார்த்திபன் கனவில் உதித்தவரே
பொன்னியின் செல்வனை பெற்றவரே
உன் பொற்பாதம் தொட வாய்ப்பிலை
ஆனால் உன் எழுத்தை தொடும் பாக்கியம் பெற்றேன்
ச‌ரித்திரத்தைப் புகழ நான் சரித்திரம் தெரிந்தவனில்லை.

கல்கியின் பிறந்த நாள்

இன்று பலரிடையே நூல் வசிக்கும் பழக்கம் அறவே இல்லாமல் போய் விலட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.அதனால் நாம் பலவற்றை இழந்துவிட்டோம். இப்பொழுது கதைக்கு வருவோம். நாளை கல்கி அவர்கலின்
பிறந்த நாள். அவரின் பிறந்த நாளில் இப் பதிவை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு இப்பதிவை காணிக்கையாக்குகிறேன்.அவருடைய சிவகாமியின் சபதம் என்ற நூலைப் படித்த போது ப்பல்லவர்களைப்பற்றியும்,
பொன்னியின் செல்வன் படித்தபோது சோழர்களைப்பற்றியும் அறிந்து கொண்டேன் என்பதை விட அவர்கள் காலத்திற்கே சென்று வந்தேன் என்றாள் அது மிகை அல்ல.இதை படித்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

கல்கி வாழ்க!
அவர் புகழ் ஓங்குக!